Thursday, August 25, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு


இன்று வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் :


முருகப் பெருமான்:

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். “ஆண்பிள்ளை” அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.
ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

குழந்தைப் பற்று:

வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்,

Tuesday, August 16, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு :




தமிழ்த் திருப்பணி:


     வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.
 தபால் தலை:
      வாரியார் சுவாமிகளை பெருமைபடுத்தும் நோக்கில் வாரியார் சுவாமி உருவம் பதித்த தபால் தலை வெளிஇட்டது இந்தியஅரசு, 
பெண்களை மதித்தவர்:

        வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது” என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.


பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். “மலரினும் மெல்லிது காமம்” புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

“தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.”


தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்,

Thursday, August 11, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு:

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500 :







 நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.
கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் மகான்களையும் வணங்கினால் துன்ப கடலில் நாம் முழ்கிவிடாமல் இருக்க இறைவனின் ஆசி அவர்களின் வேண்டுதலின் மூலமாக சுலபமாக கிடைக்கிறது. முதல் அமைச்சரிடம் ஒரு வேலை நமக்கு ஆக வேண்டும். அவருக்கே ஆயிரத்தெட்டு வேலை. அதனால் முதல் அமைச்சரை உடனே பார்க்க இயலவில்லை. ஆனால் முதல்வரின் செயலாளர் உங்களின் நெருங்கிய நண்பர். அப்புறமென்ன உங்கள் வேலை உடனே ஆகாதா?.
பொதுவாக இறைவன் நேரில் வருவதில்லை. அப்படியே வந்தால் பக்தர்கள் அவரை விடுவதாக இல்லை. எதாவது கடவுளிடம் வரம் கேட்க வேண்டும் என்று ஏனோ தானோ என்று கேட்பார்கள். ஆனால் இப்போது அப்படி இருக்காது. ஒருவேளை கடவுள் நேரில் வந்தால் அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை முன்கூட்டியே உங்கள் செல்போனில் நோட்ஸ் எழுதி வைத்திருப்பீர்கள். பக்தர்கள் விவரமானவர்களாக மாறிவிட்டார்கள்.

ஒருநாள் இறைவன் ஒரு பக்தன் முன்தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன்.“ என்றார். அந்த பக்தன் ஒரு இளைஞன். ஆனால் அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?, “நான் என் பேரனுடன் தங்கதட்டில் சாப்பிட வேண்டும்.“ என்றான். ஒரு வரத்திலேயே, திருமண வரம். குழந்தை பாக்கியம். பேரனை பார்க்கும் அளவு தீர்க்க ஆயுள். சாகும் வரை வசதியான வாழ்க்கை என வாழ்வதற்கு என்னனென்ன தேவையோ அத்தனையும் ஒரே வரத்தில் இறைவனிடம் கேட்டு பெற்றான்.
இறைவன் சில சமயம் மனித ரூபத்தில் திகழ்கிறார். அந்த மனிதர்களையே மகான்களாக நாம் போற்றுகிறோம். இராமலிங்க வள்ளலாரின் மகிமையை பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கூறி இருக்கிறார்.
1941முதல் 1950வரை வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணி செய்து கொண்டு இருந்தார் வாரியார் சுவாமிகள். அப்போது அதில் வேலை செய்தவர்களுக்கு ரூ.3500 சம்பளம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாததால் நகையை அடமானம் வைத்து பணத்தை வேலையாட்களுக்கு தந்தார். இது என்ன சோதனை.? நகை அடமானம் வைக்கும் அளவுக்கா இறைவன் கொண்டு செல்வது? இருந்தாலும் பரவாயில்லை, யாருக்கா செய்கிறோம்? இராமலிங்க வள்ளலாருக்காகதானே இந்த திருப்பணி.“ என்று சமாதானம் கொண்டார். சுவாமிகள்.

ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் வந்தார்கள். வள்ளலார் பற்றிய கதாகாலஷேபம் செய்ய வேண்டும் என்றார்கள் அந்த தம்பதியினர்.  வாரியார் சுவாமிகள் யாரிமும், நான் கேட்கும் தட்சணைதான் தர வேண்டும் என்று பிடிவாதமாக கேட்க மாட்டார். எவ்வளவு கிடைத்தாலும் அது முருகன் செயல் என கருதுவார். நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு சிதம்பரத்திற்கு பக்கத்தில் உள்ள தெம்மூருக்குக்ச் சென்று வள்ளலார் வரலாற்றை பற்றி கூற சென்றார். அந்த ஊரில் பலத்த மழை.
இதனால் சாலையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. “இது என்ன கொடுமையாக இருக்கிறதே. இப்படி சதசதவென இருந்தால் எப்படி கதாகாலஷேபம் செய்வது?. அப்படியே இருந்தாலும், யார் சேற்றில் உட்காந்திருந்து கேட்பார்கள்? என்ற கவலை வாரியார் சுவாமிகளுக்கு. பக்தர்கள் உட்கார தென்னை ஒலைகீற்றுகளையும் வைக்கோலையும் பரப்பி மக்களை அமர வைத்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர். வள்ளலார் வரலாற்றை சிறப்பாகவும் அழகாகவும் வழங்கினார் வாரியார் சுவாமிகள். நிகழச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
பிறகு நிகழ்ச்சியை நடத்திய தம்பதியினர், ஒரு தட்டில் பழம் – பூ வெற்றிலை – பாக்குடன் வாரியார் சுவாமிகளின் முன்னே வந்து நின்றார்கள். இதை பார்த்த சுவாமிகள், பொதுவாக பழதட்டுடன் வருபவர்கள் 25 ரூபாய்தான் தட்சனை வைப்பார்கள். இது அவர் அனுபவத்தில் கண்ட உண்மை.

அதுபோல்தான் இந்த தம்பதியினரும் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் தட்டை வாங்கி பார்த்தார் சுவாமிகள். பார்த்தவுடன் மனதில் மகி்ழ்ச்சி ஏற்பட்டது. அந்த தட்டில் 3500 ரூபாய் இருந்தது.  இதை கண்டு அவர் மனம் நெகிழ்ச்சி கொண்டது. வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணி வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க 3500 ரூபாய்க்கு நகையை அடமானம் வைத்தோம். “நான் யாருக்கும் கடன்காரன் இல்லை“ என்று சொல்லும் விதமாக, “எனக்காக அடமானம் வைத்த நகையை மீட்க இந்த பிடி உன் பணம் 3500 ரூபாயை.“ என்று அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலாரே தன் பக்தர்களாகிய இந்த தம்பதியினர் மூலமாக தந்தனுப்பினார். இல்லை என்றால் எப்படி சரியாக ரூ.3500 தருவார்கள்.? 2500 ரூபாய் தந்திருக்கலாம். 3000 ரூபாய் தந்திருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் மிகச் சரியாக திருப்பணி செலவு ரூ.3500 தந்தார்கள் என்றால் இது வள்ளலாரின் மகிமையே என்பதை உணர்ந்து வள்ளலாரை போற்றினார் ஸ்ரீ வாரியார் சுவாமிகள்,

Monday, August 8, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு :


கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு :


      சிவசுப்ரமணியசுவாமி கோவி
ல்  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த கோவிலாக விளங்குகிறது, 

அவர் பல சொற்பொழிவுகளை நமது கோவிலில் நடத்தி இருக்கிறார், 
நமது குமாரசுவாமிபேட்டை இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் நமது கிருபானந்தவாரியார் சுவாமிகள்,

அவர் ஒரு சில சொற்பொழிவுகளை நானும் சிறுவயதில் பார்த்தும் மட்டும் கேட்டு இருக்கிறேன்,
என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது, 
அவர் தான் எனக்கு எனக்கு பெயர் சூடினார் என்பது இன்னும் எனக்கு பெருமையாக இருக்கிறது, 

அவர் சொற்பொழிவு என்றால் போதும் கூட்டம் அலைமோதும் கோவிலின் முன் , அவரின் சொற்பொழிவு கேட்பதற்கு மிகவும் 
அருமையாக இருக்கும்,





தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை,

"அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார்,

பிறப்பும் கல்வியும்:
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர்
,முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்,அன்னையார் கனகவல்லி அம்மையார்,

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். 

* இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். 

* எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்,

தமிழோடு தவழ்தல்:
வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 
  • நன்னூல் முதலான இலக்கண நூல்களையும்,
  • தேவாரம்
  • நளவெண்பா
  • ஒளவையாரது நூல்கள்
  • திருப்புகழ்க் கீர்த்தனைகள்
முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார்.


பன்னிரண்டு வயது நிரம்பியபோதே

  • தேவாரம்
  • திருப்புகழ்
  • திருவருட்பா
  • கந்தபுராணம்
  • கம்பராமாயணம்
  • வில்லிபாரதம்
முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அது தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்,

இசை பயணம்:

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர். சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு "இதுகாறும் இதனை அறிந்திலமே" என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள்.

"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.

சொற்பொழிவாளர்:


இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை,
 தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும். 

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து சில முறை (தாத்தா சொல்லி) சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்,

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

படைப்புகள் :


சுவாமிகள்,
  • திருமுருகாற்றுப்படை
  • திருவாசகம்
  • தேவாரம்
  • திருப்புகழ்
  • கந்தர் அலங்காரம்
  • கந்தர் அநுபூதி
  • வேல் விருத்தம்
  • மயில் விருத்தம்
  • திருவகுப்பு
  • திருவருட்பா
முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள். அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்" என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.

அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள்,

  • சிவனருட்செல்வர்
  • கந்தவேள் கருணை
  • இராமகாவியம்
  • மகாபாரதம்
ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை அவர் படைத்தார். 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒரு முறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

  • கவிதை
  • கட்டுரை
  • கதை
  • காவியம்
ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர்.

மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும், உபந்யாசங்களும் கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால்,
  • ஞானாசிரியராகவும்
  • மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும்
  • பத்திரிகை ஆசிரியராகவும்
  • பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும்
  • கட்டுரை ஆசிரியராகவும்
  • சிறுகதை எழுத்தாளராகவும்
  • அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும்
விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்,

தொடரும்..

Wednesday, August 3, 2011

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி கோவிலின் சிறப்பு:


வணக்கம் நண்பர்களே,

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி கோவிலின் சிறப்பு: 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்- செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலாற்  வானோரும்  ஆனைமுகத்தோனை
காதலாற் கூப்புவார்    தம்கை .                       

ஸ்தோத்திரம்:

முஷிக வாகன  மோதக ஹஸ்த,
சாமள கர்ண விளம்பித  சூத்திர,
வாமன ரூப   மகேஸ்வர  புத்ர,    
விக்ன வினாயக பாத நமஸ்தே,

பிள்ளையார் தரிசனம்:


அழகான நிமிர்ந்த கம்பிரமான ராஜகோபுரத்தை இங்கு காணமுடியும்,


முலாலைய கோபுரம் மற்றும் பின் கோபுரம் இணைந்த காட்சி இது,




அழகான பின் கோபுரம் தரிசனம்,



அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி:


கோவிலின் முன்புறத்தில் அழகிய நுழைவாயில் அங்கு இருந்துந்தபடிய வலப்புறம் பார்த்தல் செல்வவிநாயகர் கோவிலும், இடப்புறம் பார்த்தல் மாரியம்மன் கோவிலும் பார்க்கமுடியும், நுழைவாயிலை சற்று கடந்து சென்றால் காவடி கோவிலும் பார்க்கமுடியும்,   காவடி கோவிலின் சிறப்பை பின்பு விரவாக மற்றும் தெளிவாக பார்க்கலாம் ,

தர்மபுரி குமாரசுவாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருகோவில் நுழைந்த உடன் நேராக பார்த்தல் தருமபுரியை ஆட்சி பன்னும் நமது ராஜா சிவசுப்ரமணிசுவாமியை பார்க்க முடியும், இவரை நாம் பார்க்கும் விதத்தில் கட்சி குடுப்பாரு உதாரணமாக நண்பராக பாத்தால் நண்பராகவும், தெய்வமாக பார்த்தல் தெய்வமாக கட்சி கொடுப்பார் இவர், 


* வலதுபுறம் பார்த்தல் அவரின் அப்பா தாண்டவ கோலத்தில் ஆனந்த  நடராஜராக காட்சி கொடுக்கிறார்,



* இடப்புறமாக பார்த்தல் மாமனார் சென்னகேசவ பெருமாளாக காட்சி கொடுக்கிறார்,


* ஒரே நேரத்தில் முவரையும் பார்ப்பது இந்த கோவிலின் சிறப்பு ஆகும்,
* பக்கத்தில் துர்கை அம்மனனுக்கு தனி கோவில் உண்டு,

* தர்மபுரில் பெரியகோவில் என்று அனைவராலும் அழைக்கப்படும் கோவில் அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருகோவில் ஆகும், 
கோவில்களில் அன்னதானம் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்த முதல் அறிவிப்பிலே நமது கோவில் இடம் பிடித்தது என்பது பெரிமையான செய்தி,

தினம் தினம் மூன்று வேலை பூஜைகள் நடைபெருகியது,
மாதம் மாதம் சஷ்டி & கார்த்திகை, அன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் , சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெறுகிறது,
வருடம் வருடம் நடைபெறும் பெருவிழாகளும் நடைபெறுகிறது,

* தைப்பூசம், 
* கந்தசஷ்டி,
* பங்குனி உத்தரம்,

விழாகளும் சிறப்பாக நடைபெறுகிறது,

அதுமட்டும் இல்ல ஆனந்த நடராஜருக்கு ஆண்டுக்கு இருமுறை மட்டும் சிறப்பாக  விழாகளும் நடைபெறுகிறது,

* ஆனி திருமஞ்சன திருவிழாவும்,


* ஆருத்தர திருவிழாவும்,


* மாதம் இருமுறை பிரதோஷம் நடைபெறுகிறது,
* வருடத்தில் ஆறு அபிசேகம் சிறப்பாக நடைபெறுகிறது,

சிறப்பாக நடைபெறுகிறது,

அதுமட்டும் இல்ல செனகேசவ பெருமாள் சுவாமிக்கு  சிறப்பான திருவிழாகளும் நடைபெறுகிறது,

* ஸ்ரீராமநவமி திருவிழாவும்,
* வைகுண்டஏகாதசி திருவிழாவும்,


* மாதம் மாதம் ஏகாதசி சுவாமி திருவிதி உலாவும் நடைபெறுகிறது,

கோவில் பரிகாரத்தில் நிருதி விநாயகர் சன்னதியும், வீரபதரசுவாமி சன்னதியும், சண்டிகேசவர் சுவாமி சன்னதியும், நவகிரக சன்னதியும், இடுமன் சன்னதியும் இருக்கிறது,

* பரிகாரத்தில் இருக்கும் நிருதி விநாயகருக்கு மாதம் மாதம் சங்கடசகுர்த்தி பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது,



* இடுமன் சுவாமிக்கு மாதம் மாதம் சஷ்டி அன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடை பெறுகிறது,

கோவிலுக்கு எதிரே கோவிலுக்கு சொந்தமான தெப்பகுலம் உள்ளது,


இதுவே எனக்கு தெரிந்த வரை கோவிலின் சிறப்பு மற்றும் ஸ்தல வரலாறு ஆகும்,

தொடரும்..